search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் தடுப்பணை பலி"

    • ஒரு பெண் உள்பட 7 மாணவிகள் கெடிலம் ஆற்றில் தடுப்பணையில் மூழ்கி பலியானார்கள்.
    • 7 பேர் இறந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் உடனடியாக தன்னை சம்பவ இடத்திற்கு அனுப்பியதை யொட்டி தான் நேரில் வந்து பார்த்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தேன்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் அருங்குணம் ஊராட்சி குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 7 மாணவிகள் கெடிலம் ஆற்றில் தடுப்பணையில் மூழ்கி பலியானார்கள். இத்தகவலினை அறிந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவருடைய சொந்த நிதி ஆதாரத்திலிருந்து தலா ரூ.25,000 - வீதம் 7 பேர் குடும்பதாரர்களிடம் ரூ.1,75,000- வழங்கினார்.

    அதன்பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    7 பேர் இறந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் உடனடியாக தன்னை சம்பவ இடத்திற்கு அனுப்பியதை யொட்டி தான் நேரில் வந்து பார்த்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தேன். மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இந்த விசாரணையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் பள்ளம் எப்படி ஏற்பட்டது மேலும் அங்குள்ள மண்ணின் தன்மை என்ன என்பதெல்லாம் குறித்து ஆய்வின் முடிவில் தெரியவரும்.

    இவ்வாறு கூறினார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • கிராம மக்கள் உதவியுடன் 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேரும் இறந்தனர்.
    • இந்த சம்பவத்தை கேள்விபட்டு ஏராளமானோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் மகள் சங்கவி (வயது 18), குணாலன் மனைவி பிரியா (19), அமர்நாத் மகள் மோனிசா (17), மோகன் மகள் நவநீதா (20), முத்துராமன் மகள் சுமிதா (15), அயன்குறிஞ்சிப்பாடி ராஜகுரு மகள்கள் பிரிய தர்ஷினி (15), காவியா (10).

    இவர்கள் 7 பேரும் நேற்று மதியம் கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்கள் குளிக்க சென்ற பகுதி ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை. ஆற்றில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதியில் இறங்கினர். அப்போது ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்கள்.

    இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கம் ஆடு, மாடு மேய்த்தவர்கள் ஓடிவந்தனர். இவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடிய வில்லை. உனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

    கிராம மக்கள் உதவியுடன் 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேரும் இறந்தனர். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த சம்பவத்தை கேள்விபட்டு ஏராளமானோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர்களது உடல் நேற்று பிரேத பரிசோதனை முடிந்தது. பின்னர் அயன்குறிஞ்சிப்பாடி ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி, காவியா ஆகியோரது உடல்கள் அயன்குறிஞ்சிப்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதேபோல மற்ற 5 பேரின் உடலும் ஏ.குச்சிபாளையம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரவர் வீட்டில் உடல்களை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் 5 பேரின் உடலும் அங்குள்ள மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஊர்மக்கள் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும்.
    • துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    புதுடெல்லி:

    கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில், 'தமிழகத்தில் கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும். இந்த சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பலியானவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    மோடி டுவிட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழத்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    ×